பதில் :
லக்னம் – மகரம்
ராசி – மீனம்
நட்சத்திரம் – உத்திரட்டாதி 4ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சுக்கிர திசையில் சூரியன் புத்தி 18-12-2020 வரை உள்ளது. தங்கள் ஜாதகப்படி லக்னத்திற்கு பத்தாம் அதிபதி லாபஸ்தானத்தில் சூரியனுடன் சேர்ந்திருக்கிறார். நடப்பு சுக்கிர திசையில் சூரிய புத்தி என்பதால் இந்த புத்தி முடிவிற்குள் உங்களுக்கு அரசுப்பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. செவ்வாய்கிழமை முருகன் வழிபாடு செய்வது துர்க்கையம்மன் வழிபாடு செய்யுங்கள் தொழில் ரீதியான தடைகள் விலகும். இந்த மாதம் வரும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ராசிக்கு லாபஸ்தானம் வருவதால் உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும்
பதில் :
லக்னம் – கடகம்
ராசி – ரிஷபம்
நட்சத்திரம் – கார்த்திகை 4ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது ராகு திசையில் செவ்வாய் புத்தி 07-01-2021 வரை உள்ளது.
உங்களுக்கு 10ம் அதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சேர்க்கை லாபஸ்தானத்தை குரு பார்க்கிறார். 7-1-2021 வரை ராகு திசை உள்ளது. அதன் பிறகு குருமகா திசை 16 வருடம் சிறப்பாக இருக்கும். குரு மகா திசை துவக்கத்தில் சுமராக இருந்தாலும் சுயபுத்திக்கு பிறகு சிறப்பாக இருக்கும். எனவே கண்டிப்பாக அரசுப்பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் விடாமுயற்சி அவசியம் தேவை. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் தடைகள் விலகும். குலதெய்வ வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக அமையும்.
பதில் :
லக்னம் – கடகம்
ராசி – கடகம்
நட்சத்திரம் – புனர்பூசம் 4ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது புதன் திசையில் சுக்கிர புத்தி 23-04-2021 வரை உள்ளது.
சிறப்பான ஜாதகம் பத்தில் சூரியன் உச்சம். 9ல் சுக்ரன் உச்சம். லக்னம், ராசிக்கு 5ல் குரு, குருவின் 9ம் பார்வை லக்னம், ராசி, செவ்வாயைப் பார்ப்பதால் குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம் என பல சிறப்புகள் உண்டு. குரு செவ்வாய் பார்ப்பது சந்திரன் செவ்வாய் சேர்க்கை என யோகம் இருப்பதால் கண்டிப்பாக வீடு, மனை யோகம் உண்டு. குருப்பெயர்ச்சி மார்ச் 24ல் வருகிறது. அப்பொழுது கண்டிப்பாக திருமண வாய்ப்பு வரும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மஹாவிஷ்ணு, மகாலெட்சுமி வழிபாடு நற்பலன் தரும். மீனாட்சியம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். தினமும் காலை காக்கைக்கு தின்பணடம் அன்னம், ஏதாவது உங்கள் கையால் சாப்பிட வையுங்கள் காரியத்தடை நீங்கி காரிய அனுகூலம் தரும்.
பதில் : லக்னம் –மிதுனம்
ராசி – கன்னி
நட்சத்திரம் – உத்திரம் 2ம் பாதம்
தங்கள் ஜதகப்படி தற்பொழுது ராகு திசையில் புதன் புத்தி 24-4-2022 வரை உள்ளது. தங்களுக்கு சர்ப்ப தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளது. இதனால் திருமணம் தள்ளிப்போகிறது. லக்னத்திற்கு 7ல் களத்திர பாவத்தில் ராகு இருப்பது தோஷம் லக்னத்திற்கு எட்டில் சனி இருப்பது கடக ராசிக்கு அதுவே 7 ஆமிடம் களத்திர ஸ்தானம் எனவே திருமணம் காலதாமதம் ஆகும். அல்லது காதல் திருமணத்தில் முடியும். எனவே இந்த சூழ்நிலை உங்களுக்கு உகந்தது இல்லை. எனவே ராகு திசை என்பதால் செவ்வாய்கிழமை ராகு காலத்தில் மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கில் வழிபாடு செய்யுங்கள் தோஷத்தின் வேகம் குறையும் காரியத்தடை நீங்கும்.
பதில் :
லக்னம் – துலாம்
ராசி – கும்பம்
நட்சத்திரம் – அவிட்டம் 3ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது வியாழன் திசையில் சுக்கிர புத்தி 06-09-2020 வரை உள்ளது.
தங்களுக்கு 7ல் செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் களத்திர தோஷமாக இருப்பதால் திருமணம் காலதாமதமாகவே நடக்கும். வரன் பார்க்கும்பொழுது இதே போன்று செவ்வாய் தோஷ அமைப்பு உள்ள வரனை பார்ப்பது உத்தமம். தற்பொழுது வியாழ திசை நடக்கிறது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்து வழிபாடு செய்யுங்கள்.
வியாழ திசையில் செவ்வாய் புத்தி அல்லது சந்திர புத்தியில் திருமணம் நடக்கும். அது 2021 இறுதி அல்லது 2022 ஆரமபத்தில் நடக்கும். நீங்கள் செவ்வாய்கிழமை தோறும் 4.30மணி வரை நேரத்தில் கோயில் தூர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கில் நெய் தீபம் ஏற்றி துர்க்காஷ்டகம் படியுங்கள் இப்படி தொடர்ந்து 4 வாரம் செய்யுங்கள் காரியத் தடை விலகும். தோஷத்தின் வீரியம் குறைந்து திருமண வாய்ப்பு வரும்.
பதில் :
லக்னம் – மகரம்
ராசி – கன்னி
நட்சத்திரம் – அஸ்தம் 3ம் பாதம்
உங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சனி திசையில் புதன் புத்தி 12-03-2020 வரை உள்ளது.
தங்கள் பிறக்கும்பொழுது தேய்பிறை அஷ்டமி திதியில் பிறந்தத்தால் இதுபோன்ற சிரமங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதற்குப் பரிகாரம் ஒன்று உண்டு. ஒவ்வெரு மாதமும் தேய்பிறை, அஷ்டமி திதி அன்று காலபைரவர் முன்பாக நெய்தீபம் ஏற்றி வைத்து பைரவர் வழிபாடு செய்யுங்கள்.
அமாவாசை அன்று ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கி சாப்பிடக் கொடுங்கள். உங்கள் கஷ்டம் நீங்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு குருப்பெயர்ச்சி வரும். அப்பொழுது உங்களுக்கு சுபிட்சமான சூழ்நிலை வரும். தினமும் லெட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம் சொல்லுங்கள். மாதா நரசிம்மா போற்றி , பிதா நரசிம்மா போற்றி, குரு நரசிம்மா போற்றி, சர்வ ருண நிவர்த்தி நரசிம்மா போற்றி இதை செல்லுங்கள் சூழ்நிலை சரியாகும்.
பதில் :
லக்னம் – புதன்
ராசி – கன்னி
நட்சத்திரம் – அஸ்தம் 2ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சனி திசையில் புதன் புத்தி 5-12-2021 வரை உள்ளது.
தங்கள் கொடுத்த பிறந்த தேதி நேரப்படி இது கணிக்கப்பட்டுள்ளது. கவலைப்படாதீர்கள். மார்ச் மாதத்திற்கு பிறகு வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு குழந்தை பாக்யத்திற்குரிய நற்பலன் தருவார். குருவாயூரப்பன், பாலமுருகன் வழிபாடு செய்யுங்கள். பழநியாண்டவர் வழிபாடு உத்தமம். சனிதிசை என்பதால் சனிக்கிழமை தோறும் வெங்கடேச பெருமாள் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு நீங்கள் எதிப்பார்க்கும் விஷயம் கைகூடும்.
பதில் :
லக்னம் – சிம்மம்
ராசி – தனுசு
நட்சத்திரம் – பூராடம் 4ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு ராகு திசையில் சுக்கிர புத்தி 5-4-2020 வரை உள்ளது.
ஏழரை சனி ஜென்ம சனி என்பதால் உங்களுக்கு சிரமங்கள் அதிகம் இருந்திருக்கும். சனிக்கிழமை தோறும் நவகிரகத்தை சுற்றி வந்து சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தினமும் காக்கைக்கு உண்பதற்கு சாதம், தின்பண்டங்கள் வையுங்கள். உங்கள் சிரமங்கள் குறையும். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுடைய சூழ்நிலையில் மாற்றம் வரும். திருப்பதி வெங்கடஜலபதி, லெட்சுமி நரசிம்மர் வழிபாடு உங்கள் சிரமங்களுக்குப் பரிகாரமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு மன நிம்மதி தரும்.
பதில் :
லக்னம் – கடகம்
ராசி – மேஷம்
நட்சத்திரம் – கார்த்திகை 1ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு ராகு திசையில் சனி புத்தி 17-08-2020 வரை உள்ளது.
தங்களுக்கு லக்னத்திற்கு எட்டில் செவ்வாய். கடினமான செவ்வாய் தோஷம் அத்துடன் 1,7 ல் ராகு, கேது. இது சர்ப்பதோஷம், களத்திர தோஷம் எனவே தான் திருமணம் தள்ளிப்போகிறது. எனவே ஒருமுறை காளஹஸ்தி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். குலதெய்வம் கோயிலுக்கு நேத்திகடன் செய்யுங்கள்.
அன்னை கருமாரியம்மன் அல்லது நாகத்தம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அத்துடன் உங்களுக்கு வரன் பார்க்கும்பொழுது உங்களுக்கு இருப்பது போல செவ்வாய் தோஷம், சர்ப்பதோஷம் உள்ள ஜாதகத்தை பார்ப்பது உத்தம்ம. மைனஸ் மைனஸ் பிளஸ்.
இப்பொழுது வியாழநோக்கு உள்ளது. குருபலம் இருக்கும்பொழுதே பரிகார வழிபாடு செய்யுங்கள். திருமண கைகூடும். ராகு திசை நடப்பு என்பதால் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கில் நெய் தீபம் ஏற்றி துர்க்கை வழிபாடு நான்கு வாரம் செய்யுங்கள். திருமணத் தடை விலகும்.
பதில் :
லக்னம் – மீனம்
ராசி – தனுசு
நட்சத்திரம் – மூலம் 4ம் பாதம்
தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சந்திரன் திசையில் சனி புத்தி 18-04-2021 வரை உள்ளது. பொதுவாக பெண்களுக்கு மூலம் நட்சத்திரம் என்றாலே திருமணம் காலதாமதமாகும். உங்களுக்கு ராசிப்படி செவ்வாய் தோஷம் உள்ள்து. அதேபோல் ராசிக்கு 7ல் சுக்ரன் இருப்பது களத்திர தோஷம் அதனால் தான் திருமணம் வாய்ப்பு தள்ளிப்போகிறது. வெள்ளிக்கிழமை விநாயகர், மகாலெட்சுமி வழிபாடு செய்யவேண்டும். செவ்வாய்கிழமை சுப்பிரமணியர், துர்க்கையம்மன் வழிபாடு செய்ய வேண்டும். இந்தத் தடைகள் நீங்கும். அத்துடன் லக்னத்திற்கு ராசிக்கு 7 ஆமிடமாகிய களத்திரஸ்தான அதிபதி புதன் அவன் பாவாதிபனாகிறான். நீங்கள் மேற்படி வழிபாட்டை கடை பிடித்தால் சந்திர திசையில் அடுத்து வரும் புதன் புத்தியில் திருமணம் நடக்கும். உங்கள் குலதெய்வ திருமணம் செய்யுங்கள் குறை நீங்கும்