மதுரை,
சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து, வழக்கை பிப்ரவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், சாத்தான்குளம் காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கின்றோம்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், சாத்தான்குளம் காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர்
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கின்றோம்.
எங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கை பிப்ரவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.